தில்லியில் விளையாட்டு அரங்கங்கள் இனி இரவு 10 மணி வரை செயல்படும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தில்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியம் வழக்கமாக இரவு 8 -8.30 மணி வரை திறந்திருக்கும் என்று அலையில் சமீபமாக பயிற்சியில் ஈடுபட்ட விளையாட்டு வீரர்கள் இரவு 7 மணிக்கே வெளியேற்றப்படுவதாகவும் அதன்பின்னர் இரவு 7 மணிக்குப் பிறகு ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் தனது நாயுடன் நடைப்பயிற்சி செல்வதாகவும் சர்ச்சை எழுந்தது.
ஐஏஎஸ் அதிகாரி நடைப்பயிற்சி செல்வதற்காகவே விளையாட்டு வீரர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தில்லியில் விளையாட்டு அரங்கங்கள் அனைத்தும் இனி இரவு 10 மணி வரை செயல்படும் என அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
'விளையாட்டு வீரர்கள் அனைவரும் இரவு 10 மணி வரை பயிற்சி மேற்கொள்ளலாம், அவர்கள் பயிற்சி மேற்கொள்ள எந்தவித அசௌகரியமும் இருக்கக்கூடாது. விளையாட்டு அரங்கங்கள் அனைத்தும் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.