மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சித்து மூஸேவாலா கொலை: பஞ்சாபில் இன்று அமைதிப் பேரணி

பஞ்சாபி பாடகரான சித்து மூஸேவாலாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று அமைதிப் பேரணி நடத்தவுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா தெரிவித்துள்ளார்.

News image

சித்து மூஸேவாலா

Updated On :30 மே 2022, 9:40 am

பஞ்சாபி பாடகரான சித்து மூஸேவாலாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று அமைதிப் பேரணி நடத்தவுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா (27) அடையாளம் தெரியாத நபா்களால் மான்சா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

பஞ்சாப் மாநிலத்தில் எம்எல்ஏக்கள் உள்பட 424 பேரின் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதாக ஆளும் ஆம் ஆத்மி அரசு சனிக்கிழமை அறிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஆளும் பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சித்து மூஸேவாலாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக காங்கிரஸ் சார்பில் இன்று மாலை 6 மணிக்கு மருத்துவமனையிலிருந்து குருத்வாரா சாஹிப் வரை அமைதிப் பேரணி நடைபெறவுள்ளதாக அமரீந்தர் ராஜா தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் பிரபல பாடகராக இருந்தவா் சித்து மூஸேவாலா. இவா் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.