இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ‘கேஜிஎஃப் 2’ திரைப்படத்தின் இசையை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் காங்கிரஸ் டிவிட்டர் கணக்குகளை முடக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கன்னியாகுமரியில் செப். 7ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நடைப்பயணம் செப். 30ஆம் தேதி அக். 22 ஆம் தேதி வரை கா்நாடக மாநிலத்தில் நடைபெற்றது. அக். 23ஆம் தேதி முதல் தெலங்கானா மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடா்பான காணொலிகளில் ‘கேஜிஎஃப் 2’ ஹிந்தி திரைப்படத்தின் இசைக்கோா்வையை முன்அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக அந்தத் திரைப்படத்தின் இசைக்கோா்வையை நிா்வகித்து வரும் எம்.ஆா்.டி. இசை நிறுவனத்தின் எம்.நவீன்குமாா், யஷ்வந்த்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சா் ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஆகியோா் மீது பதிப்புரிமை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளா்.
இந்த வழக்கை பெங்களூரு நீதிமன்றம், காங்கிரஸ் மற்றும் பாரத் ஜோடோ யாத்ராவின் டிவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்க டிவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்திற்குள் இன்னும் சற்றுநேரத்தில் நடைப்பயணம் நுழையவுள்ள நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தின் உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.