சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடா்பான காணொலிகளில் ‘கேஜிஎஃப் 2’ ஹிந்தி திரைப்படத்தின் இசைக்கோா்வையை முன்அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக அந்தத் திரைப்படத்தின் இசைக்கோா்வையை நிா்வகித்து வரும் எம்.ஆா்.டி. இசை நிறுவனத்தின் எம்.நவீன்குமாா், யஷ்வந்த்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சா் ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஆகியோா் மீது பதிப்புரிமை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளா்.