ராஜஸ்தானில் பெண்கள் ஏலம் விடப்பட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் அசோக் சந்த்னா அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பில்வாரா மாவட்டத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு பெண்கள் ஏலம் விடப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த பணத்திற்கு இந்தக் காலத்தில் ஷூ கிடைப்பதே அரிது. எந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என பொறுப்பற்ற வகையில் பதிலளித்துள்ளார்.
ராஜஸ்தான் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான அசோக் சந்த்னாவின் விடியோவை பாஜக எம்.எல்.ஏ. வாசுதேவ் தேவ்நானி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோவை பகிர்ந்து பலர் விமர்சித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு பெண்கள் ஏலம் விடப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜஸ்தான் அமைச்சர் அசோக் சந்த்னாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பதிலளித்த அமைச்சர், எந்த உலகத்தில் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். இந்த காலகட்டத்தில் ஷூ கூட ரூ.10,000-க்கு கிடைப்பதில்லை. முட்டாள்தனமான பேசாதீர்கள் என பதிலளித்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த விடியோவைப் பகிர்ந்த பாஜக எம்.எல்.ஏ. வாசுதேவ் தேவ்நானி தெரிவித்துள்ளதாவது, மாநிலத்தில் குற்றச்செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடைபெற்று வருகின்றன. பெண்கள் ஏலம் விடப்படுகின்றனர். ஆனால், அந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல், பொறுப்பற்ற வகையில் மாநில அரசு நிர்வாகிகள் பதிலளிக்கின்றனர் என விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தானில் ஏலம் விடப்படும் பெண்கள், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மும்பை, தில்லி, என பல மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றனர். சிலர் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
பில்வாரா மாவட்டத்தில் கடனுக்காக பெண்கள் ஏலம் விடப்படுவது தொடர்பான சம்பவம் குறித்து உண்மை கண்டறிய தேசிய மகளிர் ஆணையம் கடந்த அக்டோபர் மாதம் இரண்டு பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை; கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்!

இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு! காரணம் என்ன?

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு உதவும் ரஷியா: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



