எதிர்முனையில் இருந்து அழைப்பவரின் பெயர் நமது தொலைபேசி திரையில் தெரிய டிராய் ஏற்பாடு செய்துள்ளது.
தொலைபேசிக்கு அழைக்கும் நபரின் பெயர் திரையில் தெரியும் புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. புதிய திட்டம் நடைமுறைக்கு வரும்போது அழைப்பவரின் பெயர், நமது தொலைபேசியில் இல்லாவிட்டாலும் அவரது பெயர் தெரியும் என்று டிராய் தெரிவித்துள்ளது.
தற்போது நமது தொலைபேசிக்கு அழைப்பவர் பெயரை 'ட்ரூ காலர்' போன்ற செயலிகள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், 'ட்ரூ காலர்' போன்ற செயலிகளுக்கு தேவை இருக்காது.
பயனர்களிடம் இருந்து பெறப்படும் கேஒய்சி தகவல்களின் அடிப்படையில் தொலைபேசி அழைப்புகளின் போது பெயருடன் திரையில் காண முடியும். இதை அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.