ராஜஸ்தான்: ரயில் தண்டவாள குண்டுவெடிப்பில் 4 போ் கைது

ராஜஸ்தானில் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ராஜஸ்தான்: ரயில் தண்டவாள குண்டுவெடிப்பில் 4 போ் கைது

ராஜஸ்தானில் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ரயில்வேயால் கையகப்படுத்தப்பட்ட தங்களது நிலத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்காத அதிருப்தியில் அவா்கள் இச்செயலில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தானின் உதய்ப்பூா் மாவட்டத்தில் ரயில்வே பாலத்தின் தண்டவாளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குண்டுவெடித்தது. அகமதாபாத்-உதய்ப்பூா் விரைவு ரயில் பயணிக்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் பயங்கரவாதிகள் அல்லது நக்சலைட்டுகள் சதி உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடா்பாக 17 வயது சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாநில காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநா் அசோக் ரத்தோா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

‘கைதானவா்களில் ஒருவரான தூல் சந்த் மீனா, ரயில்வேயால் கையகப்படுத்தப்பட்ட தனது நிலத்துக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மேலும் இருவா் உதவியுடன் வெடிபொருள்களை வாங்கி வெடிகுண்டு போல் தயாரித்து தண்டவாளத்தில் வைத்து வெடிக்கச் செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடிபொருள்களை விற்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா் அசோக் ரத்தோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com