இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! ராஜ்நாத் சிங்

இந்தியாவில் சுயதொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை கடந்த 2014ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் பெருமளவு அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :18 நவம்பர் 2022, 4:56 pm IST

இந்தியாவில் சுயதொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை கடந்த 2014ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் பெருமளவு அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நூற்றுக்கணக்கில் இருந்த சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை, தற்போது 70 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

கர்நாடக மாநிலம் உடுப்பியில், கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, ஆரம்பத்தில் நம் நாட்டில் சுயதொழில் மீதான நாட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால், கடந்த 7 - 8 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது அது 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அந்த வெற்றிக் கதை உங்களைப்போன்ற இளைஞர்களால்தான் சாத்தியமாகியுள்ளது. 

அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா முதல் நிலையில் இருந்தது. பூஜ்ஜியத்தைக் கண்டறிந்தது, இருநிலை சமன்பாட்டை கண்டுபிடித்தது என பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டவைகளை இந்தியா வழங்கியுள்ளது. 

கல்வியைப் பற்றி பேசும்போது செய்முறை (பிராக்டிகல்ஸ்) மற்றும் எழுத்துத்தேர்வு என இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். நமக்கு அறிவு மட்டுமல்ல, ஞானமும் படைத்தவர்கள் இந்தியர்கள். வறுமைக்கும், வேலைவாய்ப்பின்மைக்கும் கல்வியறிவே காரணம் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.