ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பிஎஸ்எல்வி சி-54 வெற்றி! திட்டமிட்டபடி செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்: சோம்நாத்

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

News image

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Updated On :26 நவம்பர் 2022, 9:24 am

DIN


பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு வெற்றிகரமாக விண்ணுக்குப் புறப்பட்டது. செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக படிப்படியாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில், இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசும்போது, பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி சுற்றுவட்டப்பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. 

எதிர்காலத் திட்டங்கள் நிறைய உள்ளன. அவற்றை தற்போது கூற இயலாது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 5 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளன. இதில் 4 செயற்கைக்கோள்கள் தயார் நிலையில் உள்ளன. முழு பணிகள் முடிவடைந்தவுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.