காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாட்டில் புதிதாக 3,375 பேருக்கு கரோனா; சிகிச்சையில் 37,444

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,375 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 18 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :2 அக்டோபர் 2022, 4:54 am

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,375 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 18 பேர் உயிரிழந்தனர்.

நேற்று 3,805  பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 37,444-ஆக குறைந்துள்ளது. 

ஒரு நாளில் மட்டும் 18 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,28,673-ஆக அதிகரித்துள்ளது. 

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.73 சதவிகிதமாக உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது. 

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் விகிதம் 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்தது. அதிகபட்சமாக குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 80 சதவிகிதமும், ஆந்திரத்தில் 50 சதவிகிதமும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.