நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

நாட்டில் புதிதாக 3,375 பேருக்கு கரோனா; சிகிச்சையில் 37,444

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,375 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 18 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :2 அக்டோபர் 2022, 10:24 am IST

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,375 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 18 பேர் உயிரிழந்தனர்.

நேற்று 3,805  பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 37,444-ஆக குறைந்துள்ளது. 

ஒரு நாளில் மட்டும் 18 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,28,673-ஆக அதிகரித்துள்ளது. 

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.73 சதவிகிதமாக உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது. 

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் விகிதம் 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்தது. அதிகபட்சமாக குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 80 சதவிகிதமும், ஆந்திரத்தில் 50 சதவிகிதமும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.