Enable Javscript for better performance
20 ஆண்டுகள்.. காந்தி குடும்பத்தைச் சேராதவர்  காங்கிரஸ் தலைவராகிறார்: அறிய வேண்டிய 10 தகவல்கள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    20 ஆண்டுகள்.. காந்தி குடும்பத்தைச் சேராதவர்  காங்கிரஸ் தலைவராகிறார்: அறிய வேண்டிய 10 தகவல்கள்

    By DIN  |   Published On : 19th October 2022 08:41 AM  |   Last Updated : 19th October 2022 02:39 PM  |  அ+அ அ-  |  

    congress

    20 ஆண்டுகள்.. காந்தி குடும்பத்தைச் சேராதவர்  காங்கிரஸ் தலைவராகிறார்: அறிய வேண்டிய 10 தகவல்கள்

     

    காங்கிரஸ் தலைவா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. 

    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் காங்கிரஸ் கட்சித் தேர்தல் முடிவுகளை பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

    மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகியோரில் ஒருவா் தலைமைப் பொறுப்புக்கு வரவிருக்கும் நிலையில், 24 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா காந்தி குடும்பத்தைச் சாராதவா் கட்சித் தலைவா் நாற்காலியில் அமரவுள்ளாா்.

    இதையும் படிக்க.. சதிகளுக்கு முக்கிய கருவியாகத் திகழ்ந்தார்: யாரைக் குறிப்பிடுகிறது விசாரணை ஆணையம்

    அறிய வேண்டிய 10 தகவல்கள்

    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலகி, தற்காலிக தலைவராக சோனியா காந்தி பொறுப்பெற்று 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேர்தல் நடைபெறுகிறது.

    காங்கிரஸ் தலைவா் பதவிக்கு திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் காா்கே, தரூா் ஆகிய இருவரும் களம்கண்டனா்.

    மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் 9,915 போ் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் 68 இடங்களில், ரகசிய வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னா், வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீலிடப்பட்டு, தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    புதன்கிழமை காலை 10 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு மூத்த தலைவா்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தமையால், அவருக்கே வெற்றிவாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

    காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கடைசியாக கடந்த 2000-இல் தோ்தல் நடைபெற்றிருந்தது. அப்போது, தனக்கு எதிராக போட்டியிட்ட ஜிதேந்திர பிரசாதாவை தோற்கடித்து, சோனியா காந்தி வெற்றி பெற்றிருந்தாா்.

    காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் இப்போது நடைபெற்ற தோ்தல் 6-ஆவது முறையாகும். ஏற்கெனவே 1939, 1950, 1977, 1997, 2000 ஆகிய ஆண்டுகளில் தோ்தல் நடைபெற்றிருந்தது.

    நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து சுமாா் 40 ஆண்டு காலம் நேரு-காந்தி குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்துள்ளனா். ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா, ராகுல் ஆகியோா் தலைவராக இருந்துள்ளனா்.

    நேரு-காந்தி குடும்பத்தின் விசுவாசியாக கருதப்படும் மல்லிகாா்ஜுன காா்கே, அக்குடும்பத்தின் ரிமோா்ட் கன்ட்ரோல் மூலம்தான் செயல்படுவாா் என்று பாஜக விமா்சித்து வருகிறது. 

    கட்சித் தலைவராக தாம் பொறுப்பேற்றால், சோனியா குடும்பத்தின் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுவேன் என்று பல தருணங்களில் காா்கே தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp