நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

'கார்கேவிடம் கேளுங்கள்' - தேர்தல் முடிவை முன்பே அறிவித்த ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே கட்சியின் தலைவர் கார்கே என்று ராகுல் காந்தி கூறியது பேசுபொருளாகியுள்ளது. 

News image
Updated On :19 அக்டோபர் 2022, 4:27 pm IST

காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே கட்சியின் தலைவர் கார்கே என்று ராகுல் காந்தி கூறியது பேசுபொருளாகியுள்ளது. 

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் கட்சியின் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் 9,915 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள்(96%) பதிவாகின. நாடு முழுவதும் 68 இடங்களில் ரகசிய வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதையடுத்து தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று(புதன்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. தேர்தலில், மல்லிகாா்ஜுன காா்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு வேட்பாளரான சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்றிருப்பதாகவும் 416 வாக்குகள் செல்லாதது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, கட்சியின் தலைவர் கார்கே என்பதை ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறினார். 

ஆந்திரத்தில் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அடோனியில் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது கட்சியில் உங்களுக்கு என்ன பதவி என்று ராகுலிடம் செய்தியாளர் கேட்க, அதற்கு ராகுல், 'கட்சியில் எனக்கு என்ன பதவி என்பதை கார்கே மற்றும் சோனியா காந்தியிடம் கேளுங்கள்' என்று பதில் அளித்தார். என்னுடைய பணி என்ன என்பதை கட்சித் தலைவர் தான் முடிவு செய்வார்' என்று கூறியுள்ளார். 

ராகுலின் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. கார்கே முன்னிலையில் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துகொண்டிருந்தன. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே ராகுல் காந்தி முடிவைக் கூறியது பேசுபொருளாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.