பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தீபாவளியை முன்னிட்டு தில்லியில் பலத்த பாதுகாப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

News image

தீபாவளி பண்டிகை

Updated On :1 பிப்ரவரி 2024, 4:08 pm IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

நகரம் முழுவதும் உள்ள மால்கள் மற்றும் சந்தைகள் போன்ற நெரிசலான பகுதிகளில் சீருடை மற்றும் மாற்று உடையில் போலீசார் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண் காவலர் மற்றும் பிங்க் போலீசார் குழுக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சிசிடிவி கேமராக்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தில்லி துணை ஆணையர் சஞ்சய் அரோரா அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் அந்தந்த மாவட்டங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உத்தரவிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாந்தினி சௌக், ஆசாத்பூர் மற்றும் காஜிபூர் உள்ளிட்ட முக்கிய சந்தைகள், தில்லிக்கு வெளியிலிருந்து பலர் அடிக்கடி வந்து செல்வதால், காவல் துறையினர் கண்காணிப்பில் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்பாக சந்தைகள், வணிக வளாகங்கள், முக்கிய இடங்கள் மற்றும் நெரிசலான இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஷாப்பிங் செய்யும்போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதற்காக பார்வையாளர்களிடையே விழிப்புணர்வைப் பரப்புவதற்காக சரோஜினி நகர் சந்தையின் வழித்தடங்களில் கொடி அணிவகுப்பு மற்றும் தீவிர ரோந்து மேற்கொள்ளப்படுகிறது.

ஆசாத்பூர் மண்டி உள்ளிட்ட சந்தைகளுக்கு வரும் வாகனங்களைச் சோதனை செய்யும் பணியில் குழுக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வடமேற்கு மாவட்டத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய நபர் அல்லது செயலைக் கண்டால் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கிடையில், எல்லையோர பகுதிகளில் நடமாட்டம் குறித்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.