நடிகர் ஜெயம் ரவிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று(அக்.21) மாலை எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவைப்பட்டால் பரிசோதனை செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன். முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என்று பதிவிட்டுள்ளார்.