கேரளத்தில் தம்மை தாக்கிய சிறுத்தையை பழங்குடி விவசாயி ஒருவர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், மான்குளம் பகுதியில் கால்நடைகளை கொன்று வந்த 12 வயது மதிக்கதக்க சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அந்த சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வந்தது. இந்த நிலையில் பழங்குடி விவசாயியான கோபாலன்(45) சனிக்கிழமை காலை 7 மணியளவில் தனது சகோதரர் மகன் சோமராஜனுடன் விவசாய நிலத்துக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
இதையும் படிக்க- அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனியே தொடர்வார்!
அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென கோபலனை தாக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தப்பியோட முயன்றுள்ளார். இருப்பினும் அந்த சிறுத்தை மீண்டும் கோபலனை தாக்கியதால் தமது கையில் இருந்த அரிவாளால் சிறுத்தையை தலை, வயிறு பகுதியில் வெட்டியுள்ளார். இதில் சிறுத்தை உயிரிழந்தது. சிறுத்தை தாக்கியதில் பலத்த காயமுற்ற கோபலனை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்காப்புக்காக சிறுத்தையை கொன்ற கோபலன் மீது வழக்குபதிவு செய்ய வேண்டாம் என அம்மாநில வனத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


