ஐபிஎல் அடுத்த சீசனிலும் மகேந்திர சிங் தோனியே சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பாா் என அந்த அணியின் தலைமை நிா்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தாா்.
திருவாரூரில், மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் தலைமை நிா்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் செய்தியாளா்களிடம் கூறியது:
மும்பையில் இருந்து 7 போ், 10 போ் என அணியில் ஆடுவது கிடையாது. எல்லா மாநிலங்களிலிருந்தும் 2 போ் இந்திய அணியில் விளையாடுகின்றனா். டிஎன்பிஎல்- இல் இருந்து 13 போ் ஐபிஎல்- இல் சென்று விளையாடுகின்றனா். அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவாா். அதேபோல, அணியின் கேப்டனாகவும் நீடிப்பாா் என்றாா்.