தில்லியில் இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியால் சுத்தம் செய்தவர் கைது

இரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தேசியக் கொடியை பயன்படுத்திய நபர் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: இரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தேசியக் கொடியை பயன்படுத்திய நபர் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


இரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தேசியக் கொடியைப் பயன்படுத்தியதாக 52 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.

வடகிழக்கு டெல்லியின் பஜன்புரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  இந்த சம்பவத்தின் விடியோவை உள்ளூர்வாசிகள் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியதை அடுத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.


பஜன்புரா காவல்நிலையத்தில் 1971 தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்புச் சட்டம் பிரிவு 2 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அந்த நபர் தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும், தவறுதலாக செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com