உத்தரப் பிரதேசத்தில் நாய் ஒன்று 10 வயது சிறுவனைக் கடித்துக் குதறியதில் 150-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஜியாபாத்தில், சஞ்சய் நகரைச் சேர்ந்த சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அங்குச் சுற்றித் திரிந்த பிட்புல் நாய் ஒன்று 10 வயது சிறுவனைத் தாக்கத் தொடங்கியது.
இதில் அலறியடித்துத் தப்பித்த சிறுவனை விடாமல் துரத்தித் துரத்தி அந்த கடித்துக் குதறியுள்ளது. சம்பவ இடத்திலிருந்து சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், மருத்துவமனையில் இருந்து குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். சிறுவனின் முகத்தில் 175 தையல்கள் போடப்பட்டுள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து நாயின் உரிமையாளருக்கு எதிராக மாநகராட்சி ரூ.5,000 அபராதம் விதித்தது.
இதேபோன்ற சம்பவம் சமீபத்தில் காஜியாபாத்தில் நிகழ்ந்தது. வீட்டின் லிப்டில் உரிமையாளருடன் வந்த நாய், அதே லிப்டில் வந்த சிறுவனைக் கடித்துக் குதறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.