மிசோரமில் 1.87 கோடி மதிப்புள்ள ஹெராயின் மீட்பு: ஒருவர் கைது!

அய்ஸ்வாலின் சர்வதேச சந்தையில் ரூ.1.87 கோடி மதிப்புள்ள 374 கிராம் ஹெராயினை மிசோரம் போலீசார் பறிமுதல் செய்தனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

அய்ஸ்வாலின் சர்வதேச சந்தையில் ரூ.1.87 கோடி மதிப்புள்ள 374 கிராம் ஹெராயினை மிசோரம் போலீசார் பறிமுதல் செய்தனர். 

43 வயதுடைய பெண் ஒருவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த போதைப் பொருள்களை கைப்பற்றினர். 

சிறப்புப் போதைப்பொருள் குழுவினர் வெள்ளியன்று இரவு விளையாட்டு மைதானம் அருகிலுள்ள சம்பையைச் சேர்ந்த ரோஹ்லுபுயி(43) என்பவரிடம் இருந்து 374 கிராம் ஹெராயினை மீட்டுள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. 

முன்னதாக, செப்டம்பர் 15 அன்று, சம்பை மாவட்ட காவல்துறை 55 கிராம் ஹெராயினை மீட்டது, இது சர்வதேச சந்தையில் ரூ. 27.5 லட்சம் மதிப்புடையது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com