ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறுத்தைகள் வந்துவிட்டன: வேலைவாய்ப்புகள் எங்கே? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி 

8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் ஏன் உருவாக்கப்படவில்லை என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

News image

சிறுத்தைகள் வந்துவிட்டன: வேலைவாய்ப்புகள் எங்கே? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி 

Updated On :17 செப்டம்பர் 2022, 1:37 pm

DIN

8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் ஏன் உருவாக்கப்படவில்லை என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகப்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக தென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து  பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சிறுத்தைகளை பிரதமர் நரேந்திரமோடி பூங்காவில் விடுவித்தார். 

இந்நிலையில் இந்த நிகழ்வை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

ராகுல்காந்தி தனது சுட்டுரைப் பதிவில், “8 சிறுத்தைகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு விட்டன. 8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் ஏன் ஏற்படுத்தப்படவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த மக்களவைத் தேர்தலில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.