8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் ஏன் உருவாக்கப்படவில்லை என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகப்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக தென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சிறுத்தைகளை பிரதமர் நரேந்திரமோடி பூங்காவில் விடுவித்தார்.
இந்நிலையில் இந்த நிகழ்வை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல்காந்தி தனது சுட்டுரைப் பதிவில், “8 சிறுத்தைகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு விட்டன. 8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் ஏன் ஏற்படுத்தப்படவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.