ஹிமாசலில் சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் பலி

ஹிமாசலில் சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் பலியானார்கள்.  
ஹிமாசலில் சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் பலி

ஹிமாசலில் சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் பலியானார்கள். 

ஹிமாசல பிரதேச மாநிலம், குலு மாவட்டத்தில் கியாகி அருகே நேற்றிரவு 17 பேருடன் சென்ற சுற்றுலா வாகனம் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். 10 பேர் காயமடைந்தனர். 

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இரவு முழுவதும் மீட்புப் பணிகளை மேற்கொண்ட நிர்வாகத்துக்கு பஞ்சார் தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேந்தர் நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கனமழை காரணமாக ட்ரைண்ட் மலைப்பகுதியில் சிக்கித் தவித்த 83 சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com