டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மிக முக்கிய நிறுவனத்தில் முடிவுக்கு வருகிறது 'வீட்டிலிருந்து வேலை': அதுவும்...

நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), நிறுவனம், தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறையை மாற்ற முன்வந்துள்ளது.

News image

மிக முக்கிய நிறுவனத்தில் முடிவுக்கு வருகிறது 'வீட்டிலிருந்து வேலை': அதுவும்...

Updated On :1 பிப்ரவரி 2024, 3:55 pm IST

நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), நிறுவனம், தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறையை மாற்ற முன்வந்துள்ளது.

கரோனா பேரிடர் காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இனியும் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணியாற்றும் நடைமுறையை ஊழியர்கள் தொடர முடியாது என்றே தெரிகிறது. அண்மையில், இது தொடர்பாக நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும், ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. 

அதன்படி, ஊழியர்கள் கட்டாயமாக வாரத்தில் குறைந்தது மூன்று நாள்களாவது அலுவலகம் வர வேண்டும். ஏற்கனவே மூத்த ஊழியர்களும், குழுத் தலைவர்களும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றும் நடைமுறையைத் தொடங்கிவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட மின்னஞ்சலில், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும், நாம், அலுவலகத்தில் இருந்து பணியாற்றும் நடைமுறையை ஏற்கனவே தொடங்கிவிட்டோம், நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, நமது மூத்த ஊழியர்களும், குழுத் தலைவர்களும் அலுவலகத்தில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். தற்போது, நமது மிகப்பெரிய அளவிலான ஊழியர்களும் அலுவலகம் வந்து பணியாற்றும் நேரம் வந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் மூன்று நாள்கள் அலுவலகம் வரவும், எந்தெந்த நாள்கள் என்பது குறித்து விரைவில் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எந்தக் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.