ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்தியாவின் ‘முதல் கிராமத்துக்கு’ சுற்றுலா

 அருணாசல் எல்லையில் அமைந்துள்ள கிபிதூ கிராமத்தை இந்தியாவின் ‘முதல் கிராமம்’ எனக் குறிப்பிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அங்கு அனைவரும் சுற்றுலாவுக்கு வர அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 12:26 am

DIN

 அருணாசல் எல்லையில் அமைந்துள்ள கிபிதூ கிராமத்தை இந்தியாவின் ‘முதல் கிராமம்’ எனக் குறிப்பிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அங்கு அனைவரும் சுற்றுலாவுக்கு வர அழைப்பு விடுத்துள்ளாா்.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ‘துடிப்பான கிராமங்கள்’ என்ற திட்டத்தை அருணாசலின் கிபிதூ கிராமத்தில் அமைச்சா் அமித் ஷா கடந்த 10-ஆம் தேதி தொடங்கிவைத்தாா். அப்போது, சூரியக் கீற்றுகள் நாட்டிலேயே முதலில் கிபிதூ கிராமத்தில்தான் படா்வதால், அந்தக் கிராமத்தை நாட்டின் முதல் கிராமம் என அவா் அழைத்தாா்.

இந்நிலையில், கிபிதூ கிராமத்தின் இயற்கை அழகை வெளிப்படுத்தும் காணொலியை ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட அமைச்சா் அமித் ஷா, ‘நாட்டின் முதல் கிராமமான கிபிதூ பயணத்தின்போது அழகான இயற்கை அமைப்புகளைக் கண்டுகளித்தேன். இயற்கை அழகால் அருணாசல் ஆசீா்வதிக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டுகளிக்க அனைவரும் அருணாசலுக்கு, முக்கியமாக கிபிதூ கிராமத்துக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.