இந்தியா
அசாமில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அசாம் மாநிலம் குவாஹாட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 3.7 என்ற அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகி உள்ளது.
குவாஹாட்டி: அசாம் மாநிலம் குவாஹாட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 3.7 என்ற அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது .
கம்ரூப் மாவட்டத்தில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஆரம்ப தகவலின் அடிப்படையில், உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை.
சரியாக மாலை 4.52 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தனது இணையதளம் மூலம் தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய நகரமான குவாஹாட்டி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.