சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மாநிலத் தலைநகர் ராய்பூரிலிருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ள நைமேட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கச்லாவரி கிராமத்திற்கு அருகே மாவட்ட காவலர்கள் குழு தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்த மாவோயிஸ்ட் உடல் மீட்கப்பட்டது. காயமடைந்த மாவோயிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.