கேரளத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி 2 நாள் விடுமுறை அறிவிப்பு!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. 
kur3ramjan_0305chn_10_4
kur3ramjan_0305chn_10_4

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. 

சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கேரள எல்லையோர மாவட்டங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கேரள மாநிலத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால், ஏப்ரல் 21, 22 ஆகிய இரண்டு நாள்களும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

ரம்ஜான் பண்டிகையொட்டி ஏப்ரல் 22-ம் தேதியும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாமியர் நாள்காட்டியின் படி பத்தாவது மாதமான ஷவ்வால் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, சந்திரப் பிறை காணப்பட்டு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது பொதுவாக ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு பகுதிகளில் ஒருநாள் வித்தியாசத்தில் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com