மோசமான வானிலை காரணமாக சிக்கிமில் சிக்கித் தவித்த 70 சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவம் பாதுகாப்பாக மீட்டுள்ளது.
சிக்கிமின் குபுப் மற்றும் நாதங்கில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக கடந்த 20 ஆம் தேதி அங்கு சுற்றுலாப் பயணிகள் மாட்டிக்கொண்டனர்.
இதையடுத்து, 'ஆபரேஷன் ஹிம்ரஹத்' எனும் மீட்பு நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ், நேற்று குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட 70 சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு போதிய உணவு, உடை, இருப்பிட வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதையடுத்து, 'ஆபரேஷன் ஹிம்ரஹத்' குழுவுக்கு இந்திய ராணுவம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரசியல் புரிதலே இல்லாதவா் விஜய்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா்!
விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

அமைதிக்கான அச்சாரம்!

சேலம், எடப்பாடியில் திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

