இட்லி, தேநீர், மஞ்சள் உள்ளிட்ட உணவு வகைகளால் இந்தியாவில் கரோனா உயிரிழப்பு குறைந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் கரோனா தொற்றின் போது இறப்புகளைத் தடுப்பதில் இட்லி-சாம்பார் மற்றும் ராஜ்மா-அரிசி சாதம் உள்ளிட்ட பல்வேறு இந்திய உணவுகள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்று கண்டறிந்துள்ளது.
இந்த வகை உணவில் அதிக அளவு இரும்பு, துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்டவைகள் உள்ளது. மேலும், தேநீர் உட்கொள்ளல் மற்றும் உணவில் மஞ்சளைப் பயன்படுத்துதல் ஆகியவை கரோனா தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் இறப்பு விகிதத்தைக் குறைத்திருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரும்பு, துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க அதிகம் பங்களிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டாலும், இந்த நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு நபருக்கு நபர் மாறுபடும் என கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேநீர் அருந்தும் இந்தியர்கள், நல்ல கொலஸ்ட்ராலாகக் கருதப்படும் எச்டிஎல் (உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம்) அளவை அதிகமாக வைத்திருக்க முடிந்தது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தேநீரில் உள்ள கேட்டசின்கள் இயற்கையான அட்டோர்வாஸ்டாடினாக செயல்பட்டு இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கிறது.
இந்திய உணவில் மஞ்சளின் தொடர்ச்சியான பயன்பாடு சிறந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு பங்களித்தது என்று ஆய்வு கூறுகிறது.
இந்தியா, பிரேசில், ஜோர்டான், சுவிட்சர்லாந்து மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார நிபுணர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மேற்கத்திய மற்றும் இந்திய மக்களிடையே கரோனாவின் தீவிரத்தன்மை மற்றும் உயிரிழப்புகளில் உள்ள மாறுபாடுகளுடன் உணவுப் பழக்கம் தொடர்பு உள்ளதா என்பதை ஆராய இந்த ஆய்வு மேற்கோள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



