பஞ்சாப் முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலிதளம் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலின் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நலம் விசாரித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
பிரகாஷ் பாதல் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாதலின் மகனும், தலைவருமான சுக்பீர் பாதலிடம் பேசி நலம் விசாரித்ததாகவும், அவர் நலமுடன் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சுக்பீர் பாதலுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உரையாடினார். அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ஷா வெள்ளிக்கிழமை ட்வீட் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



