பிரகாஷ் சிங் பாதல் விரைவில் குணமடைய ராஜ்நாத் சிங் வாழ்த்து!

பஞ்சாப் முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலிதளம் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலின் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நலம் விசாரித்தார். 
பிரகாஷ் சிங் பாதல் விரைவில் குணமடைய ராஜ்நாத் சிங் வாழ்த்து!
Published on
Updated on
1 min read

பஞ்சாப் முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலிதளம் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலின் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நலம் விசாரித்தார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

பிரகாஷ் பாதல் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், பாதலின் மகனும், தலைவருமான சுக்பீர் பாதலிடம் பேசி நலம் விசாரித்ததாகவும்,  அவர் நலமுடன் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இது தொடர்பாக சுக்பீர் பாதலுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உரையாடினார். அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ஷா வெள்ளிக்கிழமை ட்வீட் செய்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com