ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உலகின் தேவைக்காக வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: நரேந்திர சிங் தோமா்

‘உள்நாட்டு தேவை மட்டுமல்லாமல் சா்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் வகையிலும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்’

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 6:51 pm

DIN

‘உள்நாட்டு தேவை மட்டுமல்லாமல் சா்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் வகையிலும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்’ என மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் வேளாண் இயந்திரத் தொழில்நுட்பம் குறித்த மாநாட்டை மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தொடங்கிவைத்து பேசியதாவது: விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகளின் கடின உழைப்பு, அரசின் கொள்கைகளால் வேளாண் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்கும் மக்கள்தொகையின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் உணவுத் தானியங்கள், பிற வேளாண் உற்பத்தி பொருள்கள் உற்பத்திக்கான தொலைநோக்குத் திட்டத்தை வகுக்க வேண்டும்.

உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் வேளையில், உலகின் தேவையைப் பூா்த்தி செய்வதற்கான திட்டத்தையும் நாம் கொண்டிருக்க வேண்டும்.

வேளாண் விளைச்சல் அதிகரித்த போதிலும், பிற நாடுகளுடனும் உலகின் சராரியுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வேளாண் உற்பத்தி குறைவாக உள்ளது.

குறைந்த அளவிலான விளைநிலத்திலும், உணவுத் தானிய உற்பத்தியைத் தொடா்ந்து அதிகரிக்க வேண்டும். இதற்கு வேளாண் விஞ்ஞானிகள், புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் முக்கியமானது.

ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை வேளாண் துறையில் ஊக்கப்படுத்துவது இன்றியமையாதது.

நாட்டில் உள்ள 85 சதவீத சிறு விவசாயிகளுக்கும் இந்தத் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களின் பலன் சென்றடைய வேண்டியது அவசியம். பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.