மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்தியா-பிரிட்டன் கூட்டு ராணுவப் பயிற்சி தொடக்கம்

இந்தியா-பிரிட்டன் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது. பிரிட்டனில் உள்ள சாலிஸ்பரி சமவெளிப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 7:02 pm

DIN

இந்தியா-பிரிட்டன் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது. பிரிட்டனில் உள்ள சாலிஸ்பரி சமவெளிப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தியா-பிரிட்டன் இடையே ‘அஜய வாரியா்’ என்ற பெயரில் இருதரப்பு கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபரில் உத்தரகண்டில் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக 7-ஆவது கூட்டு ராணுவப் பயிற்சி பிரிட்டனில் உள்ள சாலிஸ்பரி சமவெளிப் பகுதியில் வியாழக்கிழமை தொடங்கியது.

நோ்மறையான ராணுவ உறவை உருவாக்குதல், ஒருவா் மற்றொருவரின் சிறந்த நடைமுறைகளை கற்றுக் கொள்ளுதல், ஒன்றிணைந்து பணியாற்றும் திறனை மேம்படுத்துதல், இருநாட்டு ராணுவத்தினா் இடையே தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை பயிற்சியின் நோக்கமாகும். இந்தப் பயிற்சி மே 11-ஆம் தேதி நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘இந்திய ராணுவத்தின் பிகாா் படைப் பிரிவினா் பயிற்சியில் பங்கேற்றுள்ளனா். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், கருவிகள் பயிற்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.