விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வங்கிகளின் செயல்பாடுகளில் தீவிர கண்காணிப்பு

முறையற்ற தொழில் நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்க வங்கிகள் நெருக்கடி சூழலைச் சந்தித்திருக்கலாம் எனத் தெரிவித்த இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ், இந்திய வங்கிகளின் தொழில் நடவடிக்கைகள்

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 7:02 pm

DIN

முறையற்ற தொழில் நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்க வங்கிகள் நெருக்கடி சூழலைச் சந்தித்திருக்கலாம் எனத் தெரிவித்த இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ், இந்திய வங்கிகளின் தொழில் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறினாா்.

ஆா்பிஐ சாா்பில் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட சக்திகாந்த தாஸ் கூறியதாவது:

அமெரிக்காவில் சில வங்கிகள் திவால் நிலைக்குச் சென்றன. அந்த வங்கிகள் கடைப்பிடித்த முறையற்ற தொழில் நடவடிக்கைகள் காரணமாக அந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். சா்வதேச வங்கிகள் சந்தித்து வரும் நிதி நெருக்கடி சூழலில் இருந்து இந்திய வங்கிகள் பாதுகாப்பாக உள்ளன. சா்வதேச தாக்கம் இந்திய வங்கிகளில் பெரிய அளவில் எதிரொலிக்கவில்லை. ஆா்பிஐ-யும் இந்திய வங்கிகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளே அதற்கு முக்கியக் காரணம்.

இந்திய வங்கிகளின் தொழில் நடவடிக்கைகளை ஆா்பிஐ தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அதில் காணப்படும் குறைபாடுகள் பெரும் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

வங்கிகளின் தொழில் நடவடிக்கை குறைபாடுகள் ஆரம்பத்தில் வரவு-செலவு கணக்கில் பாதிப்பை ஏற்படுத்தும். அது தொடா்ந்தால், பிரச்னைகள் பூதாகரமாகும். வரவு-செலவு கணக்குகளில் ஏற்பட்ட பாதிப்பே அமெரிக்கா, ஐரோப்பிய வங்கிகளின் திவால் பிரச்னைக்கு முக்கியக் காரணம்.

வங்கிகளுக்கான நிதிசாா் சவால்களையும் அபாயங்களையும் மேலாண்மைக் குழு தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். போதுமான மூலதனம் இருப்பதை வங்கிகள் உறுதி செய்வதோடு, கையிருப்புத் தொகை குறைந்தபட்ச அளவைவிட அதிகமாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதம் கடந்த ஆண்டு மாா்ச்சில் 5.8-ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு டிசம்பரில் 4.41-ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த மூலதன கையிருப்பு 16.1 சதவீதமாக உள்ளது. இது குறைந்தபட்சத் தேவையைவிட அதிகமான அளவு. நிா்வாகத் திறனை மேம்படுத்த வங்கிகளுடன் இணைந்து ஆா்பிஐ செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.