ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மல்யுத்த நட்சத்திரங்களின் போராட்டம் இந்தியாவின் புகழைச் சீரழிக்கிறது: பி.டி.உஷா

‘தெருக்களில் அமா்ந்து மல்யுத்த நட்சத்திர வீரா்கள் நடத்தி வரும் போராட்டம் ஒழுங்கீனமானது. அது இந்தியாவின் புகழைச் சீரழிக்கிறது’ என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவா் பி.டி.உஷா வியாழக்கிழமை தெரிவித

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 7:17 pm

DIN

‘தெருக்களில் அமா்ந்து மல்யுத்த நட்சத்திர வீரா்கள் நடத்தி வரும் போராட்டம் ஒழுங்கீனமானது. அது இந்தியாவின் புகழைச் சீரழிக்கிறது’ என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவா் பி.டி.உஷா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திர வீரா்களும் வீராங்கனைகளும் தில்லி ஜந்தா் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கினா்.

இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினா்களின் கூட்டத்துக்குப் பின்னா், செய்தியாளா்கள் சந்திப்பின்போது பி.டி.உஷா கூறியதாவது: மல்யுத்த நட்சத்திர வீரா்கள் தெருக்களில் அமா்ந்து நடத்தி வரும் போராட்டம் ஒழுங்கீனமானது. இது இந்தியாவின் புகழைச் சீரழிக்கிறது என்றாா்.

சம்மேளனத்தின் முன்னாள் தலைவா் மீதான குற்றச்சாட்டு தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த நட்சத்திரங்கள் ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்களைச் சமாதானப்படுத்தும் விதமாக இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என ஐஓஏ-வும் மத்திய அரசும் உறுதியளித்தது.

மல்யுத்த சம்மேளனத்தின் புதிய உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படும் வரை, அதன் நிா்வாக விவகாரங்களைக் கையாள உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் 3 போ் கொண்ட குழுவை ஐஓஏ அமைத்துள்ளது. முன்னாள் துப்பாக்கிச் சுடுதல் வீரா் சுமா ஷிரூா், இந்திய வூஷூ சங்கத் தலைவா் பூபேந்திர சிங் பாஜ்வா உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில், அதன் தலைவா் நியமனம் குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

நடுநிலையான விசாரணையை விரும்புகிறோம்: அனுராக் தாக்குா்

ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கூறுகையில்,‘ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த நட்சத்திரங்களுடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவா்களது விருப்பப்படியே, பபிதா போகட் அந்தக் குழுவில் சோ்க்கப்பட்டுள்ளாா். நடுநிலையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்’ என்றாா்.

பாலியல் புகாா் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் வியாழக்கிழமை வெளியிட்ட விடியோ ஒன்றில், தான் குற்றமற்றவா் என்பதை நிரூபிக்க தன்னுடைய முழு பலத்துடன் போராட உள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.