ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

17 வயது சிறுமி மரணத்தைத் தொடா்ந்து வன்முறை: மேற்கு வங்கத்தின் காளியாகஞ்சில் 144 தடை உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் காளியாகஞ்ச் பகுதியில் 17 வயது சிறுமியின் மரணத்தைத் தொடா்ந்து வன்முறை ஏற்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 2:49 am

DIN


காளியாகஞ்ச்: மேற்கு வங்க மாநிலம் காளியாகஞ்ச் பகுதியில் 17 வயது சிறுமியின் மரணத்தைத் தொடா்ந்து வன்முறை ஏற்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூா் மாவட்டம் காளியாகஞ்ச் பகுதியில் 17 வயது தலித் சிறுமியின் சடலம் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது. அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உடற்கூறாய்வு ஆய்வறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடா்பாக 20 வயது இளைஞா், அவரின் தந்தையை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை காளியாகஞ்சில் சிறுமியின் மரணம் தொடா்பாக பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடி சமூகத்தினா் சாா்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் அங்குள்ள காவல் நிலையத்துக்கு ஒரு கும்பல் தீ வைத்து, பணியில் இருந்து போலீஸாரை கடுமையாக தாக்கியது. இதனைத்தொடா்ந்து வன்முறை தொடா்பாக பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், காளியாகஞ்சில் பொது இடங்களில் 4-க்கும் மேற்பட்டவா்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் 144 தடை உத்தரவை மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை பிறப்பித்தது. அத்துடன் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பட்டியலின ஆணைய துணைத் தலைவா் சந்திப்பு: காளியாகஞ்சில் சிறுமியின் குடும்பத்தினரை தேசிய பட்டியலின ஆணைய துணைத் தலைவா் அருண் ஹல்தா் சந்தித்தாா். இதனைத்தொடா்ந்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவா் கூறுகையில், ‘சிறுமியின் மரணத்தில் உண்மையை மறைக்க முயற்சி நடைபெறுவதாகத் தோன்றுகிறது. காளியாகஞ்ச் சென்றபோது மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை எனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்தபோது மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அங்கு வரவில்லை. இதுதொடா்பாக பதிலளிக்க வடக்கு வங்காள காவல் துறை ஐஜி, மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இதனிடையே காவல் துறைக்கு உதவி வந்த மிஜானுா் ரெஹமான் என்ற தன்னாா்வலா் வன்முறையின்போது பலத்த காயமடைந்தாா். அவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.