இந்தியா
அமர்நாத்: 3.97 லட்சம் பேர் சுவாமி தரிசனம், 36 பேர் பலி!
அமர்நாத் புனித யாத்திரையில் 31வது நாளில் 6000 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அமர்நாத் புனித யாத்திரையில் 31வது நாளில் 6000 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 3.97 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
1,006 பேர் அடங்கிய புதிய குழு ஒன்று பகவதி நகர் யாத்திரி நிவாஸில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 749 ஆண்கள், 215 பெண்கள், 2 குழந்தைகள், 37 சாதுக்கள் மற்றும் 3 சாத்வீக்கள் புறப்பட்டுச் சென்றனர்.
இந்தாண்டு அமர்நாத் குகைக்கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்ட 36 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
62 நாள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ல் நிறைவடைகின்றது.