புது தில்லி: தில்லியில் இருந்து அல்மாட்டி கடத்திச்செல்ல முயன்ற ரூ.75 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சனிக்கிழமை அல்மாட்டிக்கு செல்லும் ஏர் அஸ்தானா விமானம் புறப்படத் தயாரானது. அதில் செல்லவிருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, எக்திவோர் அப்துல்லேவா (உஸ்பெகிஸ்தான்) என்ற வெளிநாட்டு பெண் பயணியிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில், அவரிடம் இருந்து சுமார் ரூ.75 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பறிமுதல் செய்துள்ளதாகவும், மேலும், மருந்துகளை எடுத்துச் செல்வதற்கான உரிய ரசீதுகள் எதுவும் அவரிடம் இல்லை என்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர், அந்த பெண் பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அவரது உடமைகள் அனைத்தும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


