ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

தொடரும் கொடூரம்... திருடியதாகக் கூறி சிறுவர்களை சிறுநீர் குடிக்கவைத்த அவலம்!

திருடியதாக சந்தேகத்தின் பேரில் சிறுவர்கள் இருவரை சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயை திணித்து, ஊசி செலுத்திய கொடும் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

News image
Updated On :6 ஆகஸ்ட் 2023, 2:12 pm

DIN


உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டம் பத்ரா காவல்நிலையம் பகுதியில் மனித குலத்தையே அவமானப்படுத்தும் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருடியதாக சந்தேகத்தின் பேரில் சிறுவர்கள் இருவரை சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயை திணித்து, ஊசி செலுத்திய கொடும் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டம் பத்ரா காவல்நிலையம் பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் ரூ. 2,000 காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகத்தின் பேரில், பண்ணை உரிமையாளர்கள், டீ கொடுப்பதாகக் கூறி 10 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் இருவரை பிடித்து வந்து கொடூரமாக தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அதாவது, சிறுவர்கள் இருவரின் கை, கால்களைக் கட்டி, நிர்வாணமாக்கி சிறுநீரை குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில்  நறுக்கிய பச்சை மிளகாயை திணித்து, ஊசி செலுத்தி விடியோ எடுத்துள்ளனர். தற்போது, மனித குலத்தையே அவமானப்படுத்தும் கொடூர சம்பவ விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து இது தொடர்பாக போலீசார், இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்து 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான சவுத் மற்றும் ஷாபு இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்தியப்பிரதேசத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் கழித்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு மனிதத் தன்மையற்ற செயல் தற்போது உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.