தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு பழைய கட்டடத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள எண்டோஸ்கோப்பி அறையில் இன்று காலை 11.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தளத்திற்கு கீழாக அவசர சிகிச்சை பிரிவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்தையடுத்து அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 8 தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிக்க | குறையும் தக்காளி விலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!
வாய்ப்புகள் வழங்கும் ஒப்பந்தம்!

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

