ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பேரவையில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயார்: முதல்வர் யோகி ஆதித்யநாத் 

சட்டப்பேரவையில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க உ.பி. அரசு தயாராக உள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

News image
யோகி ஆதித்யநாத் (கோப்புப் படம்)
Updated On :7 ஆகஸ்ட் 2023, 8:26 am

DIN

சட்டப்பேரவையில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க உ.பி. அரசு தயாராக உள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பொது மக்களின் உணர்வுகளை மனதில் வைத்து அனைத்து உறுப்பினர்களும் பேரவையை ஆரோக்கியமான விவாதத்தின் மையமாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன். 

பேரவையில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க தனது அரசு தயாராக உள்ளது.

மேற்கு உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரவைத் தலைவர் அனுமதி அளித்தால், வெள்ளம் மற்றும் வறட்சி குறித்தம் அவையில் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

சட்டப்பேரவையை அர்த்தமுள்ள விவாதத்திற்கான மேடையாக மாற்ற மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.