மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால், மக்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
மழைக்கால கூட்டத்தொடா் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நிலையில், மணிப்பூா் வன்முறை குறித்து பிரதமா் மோடி விளக்கமளிக்கக் கோரி, ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சிகள் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்தின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு மணிப்பூா் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்பது அக்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடியைப் பேசவைக்கும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது இன்று பகல் 12 மணிமுதல் விவாதம் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை மக்களவை கூடியவுடன் மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென்று அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.