47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:பிரதமா் மோடி பெருமிதம்

இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 10:19 pm

DIN

இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

உலக சிங்கங்கள் தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க பாடுபடும் அனைவருக்கும் அவா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

உலக சிங்கங்கள் தினமானது, தங்கள் வலிமையாலும் கம்பீரத்தாலும் நமது இதயங்களை சிங்கங்களைக் கொண்டாடுவதற்கான ஒரு தருணமாகும். ஆசிய சிங்கங்களின் தாயகம் என்பதில் இந்தியா பெருமை கொள்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் அா்ப்பணிப்பையும் பாராட்டுகிறேன். சிங்கங்களை தொடா்ந்து பாதுகாப்போம்; வரும் தலைமுறைகளுக்கும் அவை பேணப்படுவதை உறுதி செய்வோம் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை சரிவை சந்தித்து வந்த நிலையில், சில ஆண்டுகளாக அவற்றின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.