ஹரியாணாவில் இணைய சேவை மீண்டும் தொடக்கம்!
ஹரியாணாவின், நூஹ் மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இணைய சேவை மீண்டும் இன்று முதல் தொடங்கியுள்ளது.


ஹரியாணாவின், நூஹ் மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இணைய சேவை மீண்டும் இன்று முதல் தொடங்கியுள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலத்தில் நடைபெற்ற வகுப்புவாத மோதல்களைத் தொடர்ந்து நூஹ் மாவட்டத்தில் கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், வன்முறை தொடர்ந்ததின் காரணமாக மக்களின் பாதுகாப்புக் கருதிஆக.8 வரை மொபைல் இணைய சேவைகளுக்கு தடை விதித்தது. அதன்பின்னர் ஆக.13 வரை தடை நீடிக்கப்பட்டது.
நூஹ் மாவட்டத்தில் வன்முறை சற்று தணிந்த நிலையில், இன்று முதல் மீண்டும் இணைய சேவைகள் வழக்கம்போல் செயல்பட தொடங்கியுள்ளன. பள்ளிகளும் திறக்கப்பட்டு, மாணவர்கள் சுதந்திர தினத்திற்கு தயாராகி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...