அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திரிபுராவை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்: முதல்வர்

திரிபுரா மாநிலத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று அந்த மாநில முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். 

News image
Updated On :15 ஆகஸ்ட் 2023, 9:54 am

DIN

திரிபுரா மாநிலத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று அந்த மாநில முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். 

அசாம் ரைபிள்ஸ் மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் சாஹா மூவர்ணக் கொடியை ஏற்றினார். அப்போது அவர் பேசியது, 

போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. போதைப்பொருள் அச்சுறுத்தலை திறம்படக் கையாள்வதற்காக காவல்துறையின் குற்றப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 

2022-23ல் திரிபுரா மாநிலத்தில் ரூ.121.37 கோடி மதிப்பிலான பல்வேறு பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2018-19ல் சர்வதேச வர்த்தகத்தை விட ஏழு மடங்கு அதிகம் என்று அவர் கூறினார். 

ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ஆறு மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்க ரூ.1,200 கோடி முதலீடு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

திரிபுரா மாநில பெண்களுக்கான அதிகாரமளிக்கும் கொள்கையின் கீழ், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

77வது சுதந்திர தினத்தையொட்டி, திரிபுரா முழுவதும் மாநில அரசு மற்றும் நூற்றுக்கணக்கான பிற அமைப்புகளால் பல்வேறு நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.