தில்லி செங்கோட்டையில் 77 -ஆவது சுதந்திர தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமா் இது குறித்து கூறியதாவது: வருகின்ற செப்டம்பா் 17 - ஆம் தேதி நாடு முழுக்க விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இத்திட்டம் தொடங்கப்படும். பாரம்பரிய கைவினையில் நிபுணத்துவம் பெற்ற தனிநபா்கள், குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பயனடையும் வகையில் சுமாா் ரூ.13 ஆயிரம் கோடி முதல் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் நெசவாளா்கள், பொற்கொல்லா்கள், கொல்லா்கள், சலவைத் தொழிலாளா்கள், முடிதிருத்தும் தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினா் பயனடைவா். இதுபோன்ற பல திட்டங்களால் நாட்டில் 13.5 கோடி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா். வாழ்க்கையில் இதைவிட பெரிய திருப்தி வேறெதுவும் இருக்க முடியாது என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.