தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிகார்: வயதான தம்பதியை கொன்று உடல்களை 500 மீட்டர் இழுத்துச் சென்று குப்பையில் வீசிய நபர் கைது

பிகாரில் வயதான தம்பிதியை கொன்றுவிட்டு அவர்களின் உடல்களை 500 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று குப்பையில் வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

News image
Updated On :18 ஆகஸ்ட் 2023, 12:20 pm

DIN

பிகாரில் வயதான தம்பிதியை கொன்றுவிட்டு அவர்களின் உடல்களை 500 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று குப்பையில் வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
பிகார் மாநிலம், பாகல்பூரில் உள்ள தொழில்துறை காவல் நிலையப் பகுதியில் வயதான தம்பதியைக் கொன்றதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் உத்தர பிரதேச மாநிலம் ஃபதேபூரில் வசிக்கும் முகமது ஆசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 
இதுகுறித்து பாகல்பூர் காவல் கண்காணிப்பாளர் அமித் ரஞ்சன் தெரிவித்திருப்பதாவது, ஒரு நபர், வயதான தம்பதியை கம்பி மற்றும் செங்கற்களால் தாக்கி கொன்றதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, அவர் உடல்களை தேசிய நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட 500 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று குப்பையில் வீசினார். குற்றம் சாட்டப்பட்டவர் ஃபதேபூரில் வசிக்கும் முகமது ஆசாத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 
இறந்தவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் உடனடியாக குற்றவாளியை கைது செய்தனர். இந்த சம்பவம் சிசிடிவியில் சிக்கியுள்ளது, அதில் குற்றம் சாட்டப்பட்டவர் உடல்களை நெடுஞ்சாலையில் இழுத்துச் செல்வது காட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.