கேரளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்!
கேரள மாநிலம் திருச்சூரில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர்.
இன்று காலை திரிசூர் மாவட்டத்தின் கனிமங்கலம் அருகே தனியார் பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 2 தனியார் மருத்துவமனை மற்றும் திரிசூர் தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை மாநில வருவாய் அமைச்சர் கே.ராஜன் பார்வையிட்டார்.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.