மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவாவில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம்: 12 பேர் கைது

கோவாவில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

News image
Updated On :18 ஆகஸ்ட் 2023, 3:01 pm

கோவாவில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இத்தொடர் குறித்து பொதுமக்களிடம் பந்தயம் கட்டி ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தை சிலர் நடத்தி வருவதாக பொர்வோரிம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து பனாஜியில் உள்ள ஹோட்டல் வளாகம் ஒன்றில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். 

கைதானவர்கள் 12 பேரும் தில்லி, மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.