மகாராஷ்டிர மாநிலம், புணேவில் 30 வயது பெண்ணின் பித்தப்பையிலிருந்து சுமார் 1000 கற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
புணேவில் வசித்துவந்த பெண் ஒருவர் கர்ப்பம் தரித்த நிலையில், கடந்த சில மாதங்களாகக் கடுமையான வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். பின்னர், அவரது பித்தப்பையில் கற்கள் உருவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பித்தப்பையை அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
குழந்தையை பிரசுவிக்க சில மாதங்களே உள்ள நிலையில் பித்தப்பை அகற்றும் செய்யும் அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்த சில மாதங்களில் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதன்பிறகு, 30 வயது பெண்ணுக்கு 20 நிமிட லேப்ராஸ்கோபிக் மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது பெண்ணின் பித்தப்பையிலிருந்து 1000 கற்களை மருத்துவர்கள் அகற்றினர். கற்கள் ஒவ்வொன்றும் 1 முதல் 2 மிமீ வரை பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
அதிகப்படியான கொழுப்பு காரணமாகவும் பித்தப்பையில் கற்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது கற்கள் அகற்றப்பட்டு பெண் நலமுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!

காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


