பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காங்கிரஸ் முன்னாள் அமைச்சரின் ரூ. 6 கோடி சொத்துகள் முடக்கம்!

பணமோசடி விசாரணையில் பஞ்சாபில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பாரத் பூஷண் ஆஷுவின் 6 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. 

News image
Updated On :26 ஆகஸ்ட் 2023, 8:09 am

DIN

பணமோசடி விசாரணையில் பஞ்சாபில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பாரத் பூஷண் ஆஷுவின் 6 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. 

பஞ்சாப் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பாரத் பூஷன் ஆஷு மற்றும் சிலருக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கினை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. 

இந்த வழக்கில் நேற்று முன்தினம்(ஆக. 24) பஞ்சாபில் பாரத் பூஷண் ஆஷுக்கு தொடர்புடைய 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

இதையடுத்து ஆஷூவின் ரூ.6 கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

பாரத் பூஷண் ஆஷு 2021-22ல் பஞ்சாபில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார். தற்போது பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.