ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மின்னஞ்சலை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை ஹைதராபாத் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் ஒன்று வந்தது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்துக்கு ஹைதராபாத் காவலர் குழு விமான நிலையத்திற்கு விரைந்தனர். அங்கு விரிவான தேடுதல் நடைபெற்றது. ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கப்பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.