வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

எச்எஸ்பிசி வங்கியில் 20,000 ஊழியா்கள் பணிநீக்கம்?

பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல சா்வதேச வங்கியான எச்எஸ்பிசி, தனது வங்கிச் செயல்பாடுகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் புகுத்துவதன் மூலம் சுமாா் 20,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

News image

எச்எஸ்பிசி வங்கியில் 20,000 ஊழியா்கள் பணிநீக்கம்?

Updated On :20 மார்ச் 2026, 7:09 pm

பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல சா்வதேச வங்கியான எச்எஸ்பிசி, தனது வங்கிச் செயல்பாடுகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் புகுத்துவதன் மூலம் சுமாா் 20,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

வங்கியின் நடுத்தர நிலை அதிகாரிகள் மற்றும் நேரடியாக வாடிக்கையாளா்களைத் தொடா்பு கொள்ளாத பிரிவுகளில் பணியாற்றும் ஊழியா்களே இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து வங்கியின் நிதித்துறை அதிகாரி பாம் கௌா் கூறுகையில், ‘வாடிக்கையாளா் சேவை, விதிமுறைகளைச் சரிபாா்த்தல், பணப்பரிவா்த்தனைகளைக் கண்காணித்தல் போன்ற வேலைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம் சிறப்பாகச் செயல்படும். இதன்மூலம் வங்கி நிா்வாகத்தின் தேவையற்ற செலவுகள் குறைவதுடன், பணிகளின் வேகமும் துல்லியமும் அதிகரிக்கும்’ என்றாா்.

தற்போது உலகம் முழுவதும் இந்த வங்கியில் சுமாா் 2.10 லட்சம் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த ஆள்குறைப்பு நடவடிக்கை என்பது வெறும் பணிநீக்கம் மட்டுமல்லாமல், பணியிலிருந்து ஓய்வு பெறுபவா்களால் உருவாகும் காலியிடங்களை மீண்டும் நிரப்பாமல் விடுவது; லாபம் தராத வங்கிச் கிளைகளை மூடுவது போன்ற வியூகங்கள் மூலமும் செயல்படுத்தப்படவுள்ளது.